Sunday 4 October 2009

கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்


கமல்ஹாசன்,

உன்னைப் போல் ஒருவன் சினிமா பார்த்தேன்.

நிறைய பேர் படம் அப்படி இருந்தது இப்படி இருந்தது என எழுதி விமர்சனங்கள்ஓய்ந்த சந்தர்ப்பத்தில் நானும் அது மாதிரியே எழுதிக் கொண்டிருக்க நான்நிச்சயமாக உன்னைப் போல் ஒருவன் இல்லை

ஒரு படத்திலே லீகல் சிஸ்ட்த்துக்கு டிமிக்கி தந்துவிட்டு ஆஸ்திரேலியாபோய்விட்டு அங்கிருந்து போனில் போலிஸ் ஆபிசருடன் பேசுகிறார்

இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், லீகல் சிஸ்ட்த்திலே இருக்கும் ஒருபோலிஸ் ஆபீசர் சினிமாவின் கடைசி காட்சியிலே ,”’ “உங்க கையிலே இருக்கும்பாரம் ஜாஸ்தியா இருக்கும் போல இருக்கு, நான் வேணும்மினா தூக்கிட்டுவரவா” என கேட்கிறார்.

சமூகத்திலே சுத்தமான வாழ்க்கை என்பதை மேசேஜாக சொல்வதற்காகபுனையப்படும் சினிமாவிலே சுவாரசியம் சேர்ப்பதற்காக, சினிமாவின் ஹீரோசட்டத்தை தானே கையில் எடுத்துக் கொள்வதாக வரும் படங்கள் வியாபாரரீதியாக மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாக சொல்லலாம்.. என்னை விட அந்தபட்டியல் கமல்ஹாசனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் பட்டியலில் கவனம்செலுத்தாமல் இந்த கடிதத்தை தொடர்கிறேன்.

லஞ்சம் வாங்குபவர்கள், கடமையை சரியாக செய்யாதவர்கள், தீவிரவாதிகள்இப்படியானவர்கள் மீது சமூகம் கோபம் கொண்டிருப்பது மெய்தான். ஆனால்அவர்களை கையாள இப்படி சினிமாக் கணக்காக ஒரு ஹீரோ extraordinary சங்கதிகளுடன் போலிசுக்குத் தண்ணி காட்டி தண்டனை வழங்குவான் என்பதைசினிமா அளவில் மட்டுமே சாத்தியம் என்பதை சமூகம் தெரிந்து வைத்துதான்இருக்கிறது.

சினிமா என்பதை மெசேஜ் சொல்லும் யுக்தியாக, நீங்கள் வைத்திருக்கும்பட்சத்தில் சமூக அவலங்களுக்கு சினிமாவிலே ஹீரோ நடை முறையில் உள்ளலீகல் சிஸ்ட்த்திற்கு உட்பட்டே தண்டனை வாங்கித் தருவதாக, கதை அமைத்துஒரு படம் முயற்சி செய்து பாருங்களேன். என்ன கோர்ட் கேஸ் என படம் ஜவ்வடிக்குமோ என நீங்கள் கொஞ்சம் யோசிக்கலாம்.. ஆனால் அதையெல்லாம்தாண்டி சுவாரசியமாக கதை சொல்ல உங்களுக்குத் தெரிந்து இருக்கணும்னு நான் நம்புகிறேன்

இப்படி படம் செய்வதால் என்ன மேசேஜ் கிடைக்கும் எனவும் யோசித்தேன்.. சினிமாவிலே ஹீரோ ஒருவனும் இன்னும் சிலரும் மட்டுமே நல்லவர்கள்பிறரெல்லாம் சமூகப் பிரஞ்ஞையே இல்லாதவர்கள்.. குறிப்பாக அரசாங்கஅதிகாரிகள் சமூக அக்கறையே இல்லாதவர்கள் என்பது போல காட்டப்பட்டுவரும் வழக்கம் மாறிடலாம்.

இப்படி படம் எடுத்தால் எனக்கு கமர்ஷியலாக பாதிப்பு வரலாம் என நீங்கள்யோசிக்கலாம்.. இப்படி ரிஸ்க் எடுப்பதில் உன்னைப் போல் ஒருவன் இல்லையேகமல்.. அதனால் தான் இதை உங்களிடம் சொல்கிறேன்

இப்படி செய்தால் மட்டுமே நீங்கள் சொல்லும் moral anger சரியாகப் பொருந்திவரலாம்.. இல்லேன்னா anger மட்டும் இருக்கும். தான் மாரல் இருக்காது