Sunday 26 September 2010

எந்திரனுக்கு தடை வருமா ?


ரஜினிகாந்த் நடித்து வெளியிடப்பட இருக்கும் எந்திரன் திரைப்படத்திற்கு தடை விதிக்கலாமா என அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது

காரணம் என்னவாக இருக்கும் என விசாரித்ததில் திடுக்கிடும் உண்மை வெளியாகி இருக்கிறது

பிரபல விதூஷகர் இந்த திரைப்படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்னும் அக்கறையில் தனக்கு முதல் காட்சிக்கு ஓசி டிக்கெட் கிடைக்குமா என ஏறக்குறைய யாசகன் ரேஞ்சுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அரசின் கவனத்திற்கு வந்ததால் அரசு அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருக்கிறது. அந்த பிரபல விதூஷகரின் பல லட்சம் அபிமானிகள் தியேட்டர் வாசல்களை முற்றுகை இடும் அபாயம் இருப்பதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதனால் திரைப்படத்திற்கு தடை விதிக்கலாமா என அரசு யோசிப்பதாக தெரிகிறது. அரசு தரப்பிலிருந்து ஓர் உயர் அதிகாரி அந்த விதூஷகரை தொடர்பு கொண்டு சமாதானம் செய்த்ததாகவும் தெரிகிறது. எப்படியும் முதல் காட்சிக்கே டிக்கெட் ஏற்பாடு செய்துவிடுவதாகவும் , கவலை மிகுதியால் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் அளவுக்கு அதிகமாக கடன் வைத்து உற்ச்சாக பானம் அருந்திவிட வேண்டாம் என அந்த அதிகாரி அந்த விதூஷகரை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது . அரசு அதிகாரியின் சமாதான பேச்சு அந்த விதூஷகரின் வருத்தத்தினை பூஜ்யம் டிகிரிக்கு கொண்டு வந்ததா என அவரது அபிமானிகள் கவலையுடன் காத்திருப்பதாக தகவல்.. இந்த விஷயத்தில் ரஜினி என்ன நினைக்கிறார் என என அவரை தொடர்பு கொண்ட நிருபர் ஒருவரிடம் ," அளவுக்கு அதிகமாக உளறுபவருக்கும் அளவுக்கு அதிகமா தன் போட்டோவை தானே பார்த்துக்கொள்பவருக்கும் தன் அனுதாபம் எப்பவும் உண்டு" என சொன்னதாகத் தெரிகிறது

Saturday 25 September 2010

சங்கீதம் - இரண்டு ஜோக்கர்கள்



சங்கீததிற்கும் ஜோக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க இயலும் என ஆச்சர்யப்பட வேண்டாம்

சர்க்கஸில் சாகசம் செய்யும் வீரர்களைப் போலவே ஜோக்கர்கள் இமிடேட் செய்து நம்மை சிரிக்கவைப்பார்கள்.

நமது இரண்டு ஜோக்கர்களும் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. சங்கீதம் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும் அது குறித்து எழுதி விகடம் செய்து சிரிக்க வைக்கிறார்களே

இப்படியெல்லாம் நடக்கும் என தியாகராஜருக்கு தெரிந்திருந்திருக்கிறது

தியாகராஜரின் வரராக லயஜ்ஞுலு என்ற கீர்த்தனை வரிகள்

“ஸ்வரஜாதி மூர்ச்சநா பேதமுல் ஸ்வாந்த மந்து தெலியக யுண்டிந
வரராக லயஜ்ஞுலு தாமநுசு வதரேரயா”

அதாவது ஸ்வரம், ஜாதி மூர்ச்சனை ஆகியவற்றின் வேறுபாடுகளைத் தம் உள்ளத்தில் அறியாதவர்களாயினும் சிறந்த ராக தாள வித்வான் மாதிரி பிதற்றி திரிகின்றனர் என்று அர்த்தம். இது ஸங்கீத லோகத்திற்கானது மட்டுமல்ல.

இது குறித்து எனது முந்தைய பதிவில் எழுதியிருப்பதைப் படிக்கலாம்


இரண்டு ஜோக்கர்களைக் குறித்து தொடர்ந்து எழுத உத்தேசம்

Saturday 18 September 2010

சுய மோகன்

எப்போதும் தன்னைக் குறித்து தற்புகழ்ச்சி நிறைந்த எண்ணம் கொண்டிருப்பவர்களை, தனக்கு தானே வேறு வேறு பெயர்களில் கடிதம் எழுதிக் கொண்டு அதை உங்கள் நடை நன்றாக இருக்கிறது என சிலாகித்துக் கொள்ளும் அற்ப புத்தி கொண்டவர்களை , தமது திறமையால் தமது துறையில் உயர்ந்தவர்களை அவர்கள் உயிருடன் இருக்கையில் ஒரு வார்த்தையும் பேச துணிவில்லாத ஆனால் அவர்கள இறந்த பின் விமர்சனம் செய்து மகிழும் கோழைகளை , என்ன இப்படி அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்களே என கேட்டால் நான் சும்மா தமாஷுக்கு சொன்னேன் என புறமுதுகு காட்டிய சுத்த வீரர்களை ,அவர்கள் இறந்த பின்பும் அவர்களது புகழால் பொறமை எண்ணம் கொண்டவர்களை எப்படி அழைக்கலாம்

இப்படியானவர்களை சுய மோகன் என அழைக்கலாம் என நினைக்கிறேன்

Sunday 12 September 2010

சுஜாதா நினைவு


சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் , ஒரு வாசிப்பு அரங்கிற்கு எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பெயரினைச் சூட்டலாம் . வாசகர்களுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்து படிக்கும் பழக்கத்தினை தூண்டிய ஒரு நல்ல எழுத்தாளருக்கு இது ஒரு Fitting Tribute ஆக அமையும்

சுஜாதா அவர்களின் எண்ணற்ற வாசகர்கள் , அவரின் எழுத்தினை பதிப்பித்த பதிப்பாளர்கள் , இதழாசிரியர்கள் இதனை அரசிடம் ஒரு வேண்டுகோளாக எடுத்து செல்ல வேண்டும்

ஒரு எழுத்த்தாளர் , பதிப்பாளர் , ரசிகர் தானும் சுஜாதாவின் வாசகர் எனும் அடிப்படையில் முதல்வர் கலைஞர் அவர்கள் இதற்கு இசைவார் எனும் நம்பிக்கை இருக்கிறது